கிழக்கு ஆப்கானிஸ்தானில் மூன்று பெண் ஊடகப் பணியாளர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில் இந்தப் படுகொலைகளுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு இன்று பொறுப்பேற்றுள்ளது.
கிழக்கு நகரமான ஜலாலாபாத்தில் உள்ள எனிகாஸ் தொலைக்காட்சி நிலையத்தின் பணியாற்றும் 3 பெண் பணியாளர்கள் நேற்று சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
18 முதல் 20 வயதுக்கு உட்பட்ட 3 பணியாளர்களும் வேலை முடிந்து வீடு திரும்பும் வழியில் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஆப்கான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொல்லப்பட்ட 3 பெண் ஊடகப் பணியாளர்களின் இறுதிச் சடங்குகள் இன்று புதன்கிழமை நடைபெற்றன.
இதேவேளை, தாக்குதலில் காயமடைந்த நான்காவது பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதி அஷ்ரப் கானி இந்த தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.